அன்புடையீர்.... திருவருள்மிகு இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் சார்பான தகவல்களை திரட்டி அம்பிகையினுடைய புகழையும் கீர்த்தியையும் பரப்புவதும் பகிர்ந்து கொள்வதுமே எமது நோக்கமாகும். எம் நோக்கம் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எமது ஆலய பெருமைகளை ஓரளவேனும் இப்பதிவினுடாக தெரியப்படுத்துவதன் மூலம் ஆலய வரலாற்றுப் பின்னணியும்அம்பிகையின் புகழும் கீர்த்தியும் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எம்மால் முடிந்த வரையில் முயல்கின்றோம், இவ் இறைபணியில் நீங்களும் கைகோர்த்து, உங்களிடமுள்ள இவ்வாலய சம்பந்தமானகட்டுரைகள், புகைப்படங்கள், வெளியீடுகள், இணைய பதிவுகள்,போன்றவற்றை எமது மின்னஞ்சல் முகவரியூடாக எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறும், தொடர்ந்து எம்முடன் இணைந்திருந்து உங்கள் மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வழங்குமாறும் பணிவன்புடன் வேண்டிநிற்கிறோம். நன்றி srikanakampikai@gmail.com